Telegram Web Link
⚪️🔴சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.44,168-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.5,521-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.79.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

- @u7news
⚪️🔴இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில் அரசு மரியாதை.

குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழகம் தொடர்ந்து விளங்கி வருகின்றது - முதல்வர்.

- @u7news
👍5👏1
⚪️🔴வாரணாசியில் ரூ.450 கோடி மதிப்பில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

31 ஏக்கர் பரப்பளவில், 30 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் மைதானம் கட்டப்பட உள்ளது.

2025ம் ஆண்டுக்குள் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்டி முடிக்க மத்திய அரசு திட்டம்.

- @u7news
⚪️🔴1330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசு - இதில் பங்கேற்பது எப்படி.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது:

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1,330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்றோதல் நேராய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நேராய்வில் கலந்து கொண்டு 1330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.15,000/- பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த நேராய்வில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறி குழுவினரால் திறனாய்வு செய்யப்பட்டு தகுதியானவர்கள் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவர். இதற்கான திறனாய்வு திருவண்ணாமலை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையினரால் நடத்தப்படும்.

இந்நேராய்வில் பங்கேற்பவர்கள் 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இயல் எண் அதிகாரம் எண், பெயர். குறள் எண் போன்றவற்றை தெரிவித்து, அதற்கான திருக்குறளைச் சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் இந்த போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்தப் பரிசைப் பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்கக் கூடாது.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவியர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். அல்லது  www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, திருண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 30.11.2023-ஆம் நாளுக்குள் அளிக்கலாம். இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w
👍1
⚪️🔴சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்

விஜயவாடா - சென்னை உள்பட 9 புதிய வந்தே பாரத் ரயில்களின் இயக்கத்தை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி

- @u7news
😁1
⚪️🔴12 மாவட்டங்களுக்கு இன்று மழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, நீலகிரி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

- தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

- @u7news
👍1
⚪️🔴சந்திரயான் 3 விக்ரம், பிரக்யான் உடன் தொடர்பு கொள்ள இந்தியா தொடர் முயற்சி

இதுவரை தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை

அக்டோபர் 6ம் தேதி வரை தொடர்பு கொள்ள இந்தியா தொடர் முயற்சி செய்யும்

அதுவரை நிலவில் பகல் இருக்கும் என்பதால் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

- @u7news
⚪️🔴நாளை அதிமுக செயலாளர்கள் கூட்டம்.

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு இபிஎஸ் தலைமையில் நடைபெறுகிறது.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு.

கூட்டணியில் பாஜக இல்லை என ஜெயக்குமார் அறிவித்த நிலையில் அடுத்தக்கட்ட முடிவெடுக்கப்பட வாய்ப்பு.

- @u7news
👍1
⚪️🔴நெல்லை - சென்னை வந்தேபாரத் ரயில் கட்டண விவரம் :

🚆 சென்னை - திருச்சி - ரூ.853.60

🚆 சென்னை - திண்டுக்கல் - ரூ.1008.60

🚆 சென்னை - மதுரை - ரூ.1103.60

🚆 சென்னை - விருதுநகர் - ரூ.1183.60

🚆 சென்னை - திருநெல்வேலி - ரூ.1343.60

➤ மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டணம் உணவு இல்லாமல், அனைத்து வரிகளும் உட்பட

➤ உணவு (tea, snacks and food) வேண்டும் என்றால் கூடுதலாக ரூ.300 செலுத்த வேண்டும்

➤ உணவு வேண்டாம் என்றால், முன்பதிவு செய்யும்போது No food என்று தேர்ந்தெடுக்கவும்

- @u7news
👍3
⚪️🔴பிரக்யான் ரோவரின் சக்கரத்தில் இருந்த தேசிய சின்னம், இஸ்ரோ லோகோவின் தடம் நிலவில் பதியாததற்கான காரணம் குறித்து இஸ்ரோ தலைவர் விளக்கம்

சந்திரயான் 3 பிரக்யான் ரோவரின் சக்கரத்தில் இருந்த இந்திய தேசிய சின்னம், இஸ்ரோ லோகோ ஆகியவற்றின் அச்சு, நிலவில் பதிவாகாமல் போனதற்கு மண்ணின் தன்மையே காரணம் என தகவல்!

நிலவின் மண் தூசிகளாக அல்லாமல் மிக இறுக்கமாக இருந்துள்ளது; எனினும், அங்குள்ள மண் பற்றிய புதிய புரிதலை கொடுத்துள்ளது.

இது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கருத்து.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w
👍1
⚪️🔴26 ஆண்டுகால வழக்கம்..!
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் கரைக்கப்பட்ட மதுரை அரசமரம் விநாயகர் சிலை.

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசமரம் விநாயகர் கோயிலின் சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 5 அடி உயரமும், ஒரு டன் எடையும் கொண்ட எந்தவொரு கலப்படமும் இல்லாமல் முழுவதும் களிமண்ணால் ஆன விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடலில் விஜர்சனம் செய்வதை கடந்த 25 வருடங்களாக வழக்கமாக வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்தாண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று அரசமரம் விநாயகர் கோயிலில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள், வழிபாடுகள் நடத்தி விநாயகர் சதுர்த்தி கொண்டாடினர்.

இதையடுத்து, 26வது முறையாக காலை 10 மணி அளவில் மதுரையில் இருந்து புறப்பட்டு வழிநெடுகிலும் உள்ள விநாயகர் கோயில்களில் பூஜைகள் செய்யப்பட்டு மாலை 5 மணியளவில் ராமேஸ்வரம் வந்து முக்கிய பகுதிகளில் வீதி உலா அக்னி தீர்த்தம் கடற்கரைக்கு வந்தடைந்தனர்.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w
⚪️🔴சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் வரை மட்டுமே அனுமதி!

ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் புகழ்பெற்ற “சதுரகிரி சுந்தரமகாலிங்கம்” சுவாமி கோவில் உள்ளது இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்.

இந்நிலையில் சதுரகிரியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வருகிறசெப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை, தொடர்ந்து 4 நாட்களுக்கு செல்ல வனத்துறை அனுமதி கொடுத்துள்ளனர்.

புரட்டாசி பவுர்ணமி தினத்தையொட்டி பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது கனமழை வெளுத்து வாங்குவதால், பவுர்ணமி அன்று மழை பெய்தால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w
👍1
⚪️🔴இனி குரூப் கால்களில் 31 நபர்கள் பங்கேற்கலாம்.

புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ள வாட்ஸ்அப்...

குரூப் காலிங் அம்சத்தை மேம்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான ஒரு தகவலின் அடிப்படையில், வாட்ஸ்அப் தற்போது 31 நபர்களுடன் குரூப் கால்களை இனி செய்யலாம் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

WABteaInfo வழங்கிய அறிக்கையின்படி, இனி 31 நபர்களுடன் குரூப் கால்களை செய்யலாம்

இதற்கு முன்பு வாட்ஸ்சப்பில் 15 நபர்கள் கொண்ட குரூப் கால்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆரம்ப கட்டத்தில் 7 நபர்கள் மட்டுமே குரூப் கால்களில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கையை 31 ஆக உயர்த்தி உள்ளது.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w
⚪️🔴நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த செருதூர் மீனவர்கள் மீது தாக்குதல்

மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள வலை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், ஜிபிஎஸ் கருவி கொள்ளை

மீன்களை தர மறுத்த 4 மீனவர்கள் மீது இரும்பு பைப்பால் தாக்குதல்; காயமடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதி

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w
👍1
⚪️🔴திருப்பதியில் டிசம்பர் மாத தரிசன டிக்கெட் இன்று வெளியீடு.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் இன்று வெளியீடு.

டிசம்பர் 1 முதல் 20 வரை ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை இன்று காலை 10 மணிக்கு www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் - திருப்பதி தேவஸ்தானம்.

- @u7news
👏1
⚪️🔴தென்மேற்கு பருவமழை இன்று முதல் விலகத் தொடங்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்.

மேற்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்கும்.

தென்மேற்கு பருவமழை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் முழுமையாக விலகும்.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3வது வாரத்திற்கு பிறகு தொடங்கும் என கணிப்பு.

- @u7news
👍1
⚪️🔴அமைச்சர் பொன்முடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்

அமைச்சர் பொன்முடி, அவரது மகன் உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு

அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 8ம் தேதி மனுத்தாக்கல்

மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என நீதிபதி கூறிய நிலையில், விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜெயக்குமார் ஆஜர்

- @u7news
👍2
⚪️🔴திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கோலாகலம்

8வது நாளான இன்று மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் தேரில் எழுந்தருளினார்

4 மாட வீதியில் வலம் வந்த மகா ரதம் - பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பியபடி வடம் பிடித்தனர்

- @u7news
👍1
⚪️🔴நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை துவங்கியது திமுக

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை

துரைமுருகனுடன் இந்திய யூனியன் முஸ்லீக் லீக் கட்சியின் காதர் மொய்தீன், நவாஸ் கனி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை

நாடாளுமன்ற தேர்தல் பணிகள், முஸ்லீம் அமைப்பின் மாநாடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை

- @u7news
⚪️🔴"விவசாயி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தருக'

திருவாய்மூரில் குறுவை பயிர் பாதிப்பால் மனமுடைந்து இறந்த விவசாயி ராஜ்குமார் குடும்பத்திற்கு அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு தர வேண்டும்.

15 ஏக்கரில் சாகுபடி செய்த குறுவை பயிர் நீரின்றி கருகியதால் வேதனையில் இருந்துள்ளார் ராஜ்குமார்.

காய்ந்த குறுவை பயிர்களை டிராக்டர் மூலம் அழித்தபோது மனவேதனையில் மயங்கிவிழுந்து இறந்ததாக தகவல்-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

- @u7news
2025/10/25 15:23:50
Back to Top
HTML Embed Code: