Telegram Web Link
❤️அனைவரும் நமது U7news வாட்சப் சேனளில் இணைந்துகொள்ளுங்கள் 🙏

FOLLOW THE U7NEWS CHANNEL ON WHATSAPP:
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w
⚪️🔴காலாண்டு விடுமுறை நீட்டிப்பு:

காலாண்டு விடுமுறைக்கு பின் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு அக்.9ம் தேதி பள்ளிகள் திறப்பு.

6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு அக்.3ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு.

- @u7news
⚪️🔴பெங்களூரில் இன்று பந்த் நடத்த போலீஸ் அனுமதி மறுப்பு

அசம்பாவிதங்களை தடுக்க பெங்களூரில் இன்று  144 தடை உத்தரவு அமல்

பெங்களூரில் இன்று வழக்கம்போல் பிஎம்டிசி, கேஎஸ்ஆர்டிசி பஸ்கள், மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிப்பு

பெங்களூரில் இன்று ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகள் வழக்கம்போல் இயங்க உள்ளது

பெங்களூரில் இன்று ஓலா, உபர், ஆட்டோக்கள் வழக்கம்போல் சேவைகள் வழங்க உள்ளன

முன்னெச்சரிக்கையாக இன்று பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

- @u7news
👍1
⚪️🔴ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை-மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு.

- @u7news
⚪️🔴தொடர்மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று 1 முதல் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை.

- @u7news
🔥1
⚪️🔴தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து இன்று பெங்களூரில் பந்த்

பெங்களூரில் காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது; மாலை 6 மணி வரை பந்த் நடக்கிறது

கர்நாடகா ஜல சம்ரக்சனா வேதிகே சார்பில் இன்று பந்த் தொடங்கி உள்ளது

- @u7news
⚪️🔴பெங்களூர் பந்த்- வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கோஷ்டி ஆதரவு தர மறுப்பு

செப்டம்பர் 29-ந் தேதி பந்த் நடத்தும் வாட்டாள் நாகராஜ் கோஷ்டி இன்றைய பெங்களூர் பந்த்-க்கு ஆதரவு தர மறுப்பு

பெங்களூர் பந்த்-க்கு ஆதரவு தெரிவித்த அமைப்புகள் கடைசி நேரத்தில் வாபஸ்

பெங்களூர் பந்த் போராட்டம்- ஓலா, ஊபர் டாக்சி சங்கங்கள், ஹோட்டல் உரிமையாளர் சங்கம் ஆதரவு இல்லை

பெங்களூர் பந்த்- விவசாயிகள் சங்கத் தலைவர் குருபூர் சாந்த குமார் தலைமையில் இன்று பேரணி

பெங்களூர் பந்த்- 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிப்பு

- @u7news
⚪️🔴இந்தியாவில் கணவரின் மாத சம்பளம் ரூ.40 ஆயிரமாக அதிகரித்த போதிலும், வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை குடும்ப தலைவர் பொறுப்பில் உள்ள ஆண்கள் வெளியில் சென்று சம்பாதிக்க வேண்டுமென நடைமுறை உள்ளது.

அதாவது, அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மனைவி, வருமானம் ஈட்ட வேலைக்கு செல்வார். முதன்மை சம்பாதிப்பவர்களாக

கணவர்கள் கருதப்படுகிறார்கள்.
எனினும், கணவரின் வருமானம் அதிகமாக இருக்கும் குடும்பங்களில், மனைவி வேலை செய்வது குறைவாக இருக்கும். ஆனால், கிராமப்புறங்களில் தற்போது இந்த போக்கு குறைந்து வருகிறது.

நகர்ப்புற இந்தியாவில் கணவரின் வருமானம் தொடர்ந்து அதிகரித்து, மாதத்திற்கு ரூ.40 ஆயிரமாக உயர்ந்தாலும், மனைவி வேலையில் அமர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஸ்டேட் ஆஃப் ஒர்க்கிங் இந்தியா 2023 அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w
👍1
⚪️🔴ECIL Technical Officer வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.31,000/-

⛳️பணியின் பெயர் - Technical Officer

👩‍🎨கல்வி தகுதி - B.E./B.Tech

🔖தேர்வு முறை - நேர்காணல்

❗️முழு விவரம்❗️: https://u7news.in/ecil-technical-officer-recruitment-2023-salary-rs31000/

-
@u7news
👍1
⚪️🔴நடிகர் விஜய்-ன் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து

பாதுகாப்பு காரணங்களால் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதே தவிர வேறு எந்த அரசியல் காரணங்களும் கிடையாது என லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தகவல்

- @u7news
👍4🤔1😢1
⚪️🔴தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை, கோவை, திருச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

சென்னையில் இருந்து 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவிப்பு

- @u7news
⚪️🔴திருச்சியில் டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழக அரசு.

திருச்சியில் ரூ.600 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழக அரசு.

10,000 பேர் பணியாற்றும் வகையில் அலுவலகம், கூட்ட அரங்கு உள்ளிட்டவை அமைக்க முடிவு.

திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் டைடல் பூங்கா அமைய உள்ளது.

- @u7news
👍1
⚪️🔴ஈராக்கில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 100 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு ஈராக், நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், திருமண மண்டபத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தால் கட்டடத்தின் கூரைகள் அங்காங்கே இடிந்து விழுந்ததில் தீ வேகமாக பரவியுள்ளது.

இதனால் மண்டபத்தைவிட்டு வெளியேற முடியாமல் 100-க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தீ விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w
⚪️🔴ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் பிரிவில் அதிவேக அரைசதம் அடித்து நேபாள வீரர் தீபேந்திர சிங் சாதனை படைத்துள்ளார்.

ஆண்கள் கிரிக்கெட் குரூப் சுற்றில் மங்கோலியா அணியும், நேபாள அணியும் மோதின.
டாஸ் வென்ற மங்கோலியா அணி பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி  விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து களமிறங்கிய மங்கோலியா 41 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 8 சிக்ஸர்கள் அடித்த நேபாள அணியின்  தீபேந்திர சிங், அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை பெற்றார்.

அவர் பேட்டிங் செய்த முதல் 9 பந்துகளில் 6, 6, 6, 6, 6, 6, 2, 6, 6 ரன்கள் ஸ்கோர் செய்தார்.

இதன்மூலம் சர்வதேச போட்டியில் 12 பந்துகளில் அரைசதம் விளாசிய இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை தீபேந்திர சிங் முறியடித்தார்.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w
👍2
⚪️🔴நட்சத்திர மண்டலத்தின் அற்புதக்காட்சி: நாசா வெளியிட்டது.

பூமியில் இருந்து 2.8 கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ள சோம்ப்ரெரோ நட்சத்திர மண்டலத்தை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது.
நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, விண்வெளியில் உள்ள பல அற்புத காட்சிகளை படம்பிடித்து வருகிறது.

அந்த வகையில்,, பூமியில் இருந்து 2.8 கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ள, அற்புதமாக காட்சியளிக்கும் சோம்ப்ரெரோ நட்சத்திர மண்டலத்தை படம்பிடித்துள்ளது.

இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு நாசா கூறியுள்ளதாவது: 50 ஆயிரம் ஒளி ஆண்டு விட்டம் கொண்ட இந்த நட்சத்திர மண்டலம், நமது பால்வெளி நட்சத்திர மண்டலத்தின் பாதி அளவு ஆகும்.

சோம்ப்ரெரோ நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் கருந்துளை உள்ளதாக விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.

இது நமது சூரியனை விட ஒரு பில்லியன் மடங்கு பெரியது.

சோம்ப்ரெரோ நட்சத்திர மண்டலத்தின் இடது மற்றும் வலது ஓரங்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.

இந்த நட்சத்திர மண்டலத்தை சுற்றியுள்ள வட்டத்தின் மையப்பகுதி மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும், நட்சத்திர மண்டலத்தின் மையப்பகுதி இளம் ஊதா நிறத்திலும் காணப்படுகிறது என தெரிவித்துள்ளது.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w
👍2
⚪️🔴பாபநாசத்தில் செல்போன் வெடித்து பெண் பலி.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே  செல்போன் வெடித்ததில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே அருகே ஆடுதுறை, விசித்திர ராஜபுரத்தில் வசித்து வருபவர் கோகிலா(32).

இவரது கணவர் பிரபாகர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், தனது மகன் பிரகதீஷ்(9) உடன் தனியாக வசித்து வருகிறார். 

இவர் கபிஸ்தலத்தில் செல்போன் மற்றும் கடிகாரம் சரி செய்யும் கடையை நடத்தி வருகிறார். கோகிலா புதன்கிழமை வழக்கம் போல் கடைக்கு வந்து தனது பணிகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார். 

அப்போது செல்போனில் சார்ஜ் போட்டபடி பேசியதாக கூறப்படுகிறது. 

இதில் மின்கசிவு ஏற்பட்டு செல்போன் வெடித்து,  கடை முழுவதும் தீ பற்றி எரிந்தது.

பின்னர், கடையின் உள்ளே இருந்த கோகிலா கூச்சலிட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். 

இருப்பினும், கோகிலா தீயில் சிக்கி உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கபிஸ்தலம் காவல் துறையினர் கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w
👍1
⚪️🔴பெளா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடைய சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கடற்கரையிலிருந்து செப்.29-ஆம் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் (எண்: 06033) நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும், மறுதடத்திலிருந்து இந்த ரயில் (எண்: 06034) செப்.30-ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை 9.05 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும்.

இந்த ரயில் சென்னை கடற்கரையிலிருந்து வேலூா் கண்டோன்மென்ட், கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூா், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w
👍3
⚪️🔴ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்துக்கு அனுமதித்த அரசு விஜய்யின் லியோ திரைப்பட விழாவுக்கு அனுமதி கொடுக்காதது ஏன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் பல படங்களில் இசைவெளியீட்டு விழாவை நடத்தியுள்ளார்.

இந்தமுறை ரத்து செய்தது ஏன்? ஏ.ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சியில் நடைபெற்ற பிரச்னையை அரசு காரணம் காட்டுகிறது.

ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது காவல் துறை. அங்கு கள ஆய்வு செய்து அனுமதித்தது போல, நேரு உள்விளையாட்டு அரங்கிலும் ரசிகர்கள் வருகை குறித்து ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும்.

ஏ.ஆர். ரஹ்மான் நிகழச்சிக்கு அனுமதி கொடுத்த அரசு, விஜய் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுப்பது ஏன்?

மக்கள் அதிகம் கூடுவார்கள் என்ற அச்சத்தில் அனுமதி கொடுக்கவில்லை என்றால், காவல் துறை எதற்கு உள்ளது என்று கேள்வி எழுப்பினார். 

அரசியல் கட்சியினர் மாநாடு நடத்தும்போது லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர்.

அப்போது பாதுகாப்பு அளிப்பது காவல் துறைதான். இப்போது அப்படி செய்வதற்கு முன்வராதது ஏன்?.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் அனுமதி கொடுக்கப்பட்டது. விஜய்க்கு ஏன் கொடுக்கவில்லை.

பந்தை எவ்வளவு பொத்திவைத்தாலும் அது மேலே வரத்தான் செய்யும் என விஜய்க்கு ஆதரவாகப் பேசினார். 

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w
👍2
2025/10/24 10:33:04
Back to Top
HTML Embed Code: